• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்து

February 27, 2020 தண்டோரா குழு

கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தை அனைக்கும் முயற்சியில் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 900 டன் குப்பை சேகரிக்கப்பட்டு தரம் பிரித்து மறு சுழற்சி செய்யப்படுகிறது. மேலும் தேக்கி வைக்கபட்டு உள்ள குப்பைகள் தரம் பிரிக்க வைக்கபட்டு உள்ளன. தேக்கி வைக்கபட்டு உள்ள குப்பைகள் மலை போல் குவிக்க வைக்கபட்டு உள்ளதால் அப்பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாகவும் இதனை வேறு இடத்திற்கு மாற்ற அப்பகுதி மக்கள் தொடர் கோரிக்கைகளை வைத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று வெள்ளலூர் குப்பை கிடங்கில் தீ பற்றியதை தொடர்ந்து அப்பகுதி முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்பட்டது. இது குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கபட்டதை தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் படிக்க