• Download mobile app
26 Apr 2024, FridayEdition - 2998
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை வஉசி மைதானத்தில் போராட்டக்காரர்கள் பூந்து விடாமல் இருக்க இரும்பு தடுப்புகளை வைத்து அடைத்த போலீசார்

February 17, 2020 தண்டோரா குழு

போராட்டக்காரர்கள் புகுந்து விடாமல் தடுக்க கோவை வ உ சி மைதானம் அடைக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்த சட்டத்தை வாபஸ் பெறக் கோரி தமிழகத்தில் போராட்டம் நடைபெற்று வருகிறது. சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் போலீஸ் தடியடி நடைபெற்றது அதை கண்டித்து போராட்டங்கள் தீவிரம் அடைந்துள்ளது.

இந்த நிலையில் கோவை வஉசி மைதானத்தில் போராட்டக்காரர்கள் பூந்து விடாமல் தடுக்கும் வகையில் மைதான நுழைவாயிலில் இரும்பு தடுப்புகளை வைத்து போலீசார் அடைத்துள்ளனர். அங்கு 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக ஆயுதப்படை போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர். இதனால் வஉசி மைதானம் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதுகுறித்து காவல்துறை அதிகாரி கூறும்போது,

மறு அறிவிப்பு வரும் வரை வஉசி மைதானம் அடைக்கப்பட்டு இருக்கும் நிலைமை சீரானதும் மைதானத்துக்குள் செல்ல பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்றார்.

மேலும் படிக்க