• Download mobile app
03 May 2024, FridayEdition - 3005
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினர் கைது

April 29, 2017 தண்டோரா குழு

மாணவர்களின் மருத்துவக் கனவை தகர்க்கும் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட்ட 25பேரை போலீசார் கைதுசெய்தனர்.

மருத்துவப் படிப்பில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி தேசிய மாணவ அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்ட கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இன்று கோவை இரயில் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

கேம்பஸ் ஃப்ரண்ட் கோவை மாவட்டத் தலைவர் .பீர் முஹம்மது, தலைமை நடைபெற்ற இந்த போராட்டத்தில், மாநில அரசு தற்பொழுது கடைபிடித்து வரும் +2 அடிப்படையிலான மாணவர் சேர்க்கை தொடர வேண்டும்.மாநில அரசின் சுய ஆட்சியை உறுதிப்படுத்த வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றம் இயற்றி அனுப்பிய இரண்டு சட்டங்களுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் வழங்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை கோஷங்களை எழுப்பினர்.

இதையடுத்து, கோவை ரயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற கேம்பஸ் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அமைப்பினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க