• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட மக்களை நம்பவே மாட்டேன் – திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி

February 17, 2022 தண்டோரா குழு

கோவை சட்டமன்ற சிங்காநல்லூர்
தொகுதிக்கு உட்பட்ட பீளமேடு ஆரோக்கிய சாமி திடலில் , நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பிரச்சாரம் மேற்கொண்டார்.

பிரச்சாரத்தில் பேசிய திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி,

கோவை மாவட்ட மக்களை நம்பவே மாட்டேன். போன முறை எல்லா இடத்திலும் நடந்த பிரச்சாரத்தில் நல்ல வரவேற்பு கொடுத்தீர்கள். ஆனாலும் , கோவையில் ஒரு இடத்தில் கூட ஜெயிக்க முடியதா நிலையை ஏற்படுத்தி கவுத்தீட்டீங்கள் என தெரிவித்தார். இந்த 9 மாதத்தில் 10 கோடி தடுப்பூசி போட்டு விழுப்புணர்வு ஏற்படுத்தி இருக்கின்றோம். இந்த 3 வது அலையை தமிழ்நாடு பாதிப்பு இல்லாமல் கடக்க காரணம் தடுப்பூசி ஊசி செலுத்தியதுதான்.

தண்ணீர் பந்தல் ரயில்வே உயர்மட்ட மேம்பாளப் பணிகள் விரைவாக முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவோம். சிங்கநல்லூர் தொகுதி உழவர் சந்தை அருகில் உள்ள பழுதடைந்த 1000 வீடுகளுக்கு பதிலாக புதிய வீடுகள் கட்டிதர தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. சிங்கநல்லூர் தொகுதி வார்ட் எண் 26, 27 பயன்படும் வகையில் பீளமேடு ரயில்வே சுரங்க பாதை அமைத்து தரப்படும்.

திமுக ஆட்சியில் 2010 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட SISH காலனி ரயில்வே மேப்பாள பணி கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்டிருந்தது. தற்போது தமிழக முதல்வரின் எட்டு மாத ஆட்சியில் ரூபாய் 30 கோடி ரூபாய் நிதி ஒதிக்கீடு செய்யப்பட்டுள்ளது.இதெல்லாம் நடக்கவேண்டும் என்றால் நீங்கள் அனைவரும் திமுக கூட்டணிக்கு வாக்களித்து மாமன்ற உறுப்பினராக்க வேண்டும்.இந்த பிரச்சாரத்தின் போது அரசியல் கட்சி வட்டாரங்களில் மேயர் வேட்பாளராக கருதப்படும் இலக்குமி இலஞ்செல்வி கார்த்திக் உள்ளிட்ட அனைத்து திமுக கூட்டணி சிங்காநல்லூர்தொகுதி வேட்பாளர்களும் உடன் இருந்தனர்.

மேலும் படிக்க