• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தினுள் நுழைய புதிய கட்டுப்பாடுகள்

November 18, 2020 தண்டோரா குழு

கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நீதிமன்ற வளாகத்தினுள் நுழைய வழக்கு தொடர்பாக வரும் பொதுமக்கள் வழக்கறிஞர்கள்,காவல்துறையினருக்கு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கோவை மாவட்ட
மாவட்ட நீதித்துறை சார்பாக வெளியிட்ட அறிவிப்பில்,

நீதிமன்ற வளாகத்திற்குள் வக்கீல்கள் மற்றும் வழக்கில் சம்பந்தப்பட்ட பொதுமக்கள் கோர்ட் வளாகத்திற்குள் வரும் போது வக்கீல் சான்றிதழுடன், வழக்கு எண், கோர்ட் பெயர், வாய்தா தேதி ஆகிய ஆவணங்களை எடுத்து வர வேண்டும் எனவும்,இந்த ஆவணங்கள் இல்லாமல் வருபவர்கள் கோர்ட்டிற்குள் அனுமதிக்கபட மாட்டார்கள் எனவும், மேலும்,நீதிமன்ற வளாக்ததுக்குள் செயல்படும், போஸ்ட் ஆபிஸ் மற்றும் வங்கிக்கு வருபவர்கள் வங்கி தொடர்பான, பாஸ்புக், ரசீதுகள் எடுத்து வர வேண்டும் எனவும்,இந்த கட்டுப்பாடுகள் மறு உத்தரவு வரும் வரை, தொடர்ந்து பின்பற்றப்படும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க