• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கிருமி நாசினி சுரங்கம்

April 10, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் நோய் பரவாமல் தடுக்கும் விதமாக ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்ட நவீன தானியங்கி கிருமி நாசினி ஸ்பிரேயர் இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் துவக்கி வைத்தார்.

கொரோனா வைரஸ் நோய் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக மக்கள் அதிகம் கூடும் பகுதிகளான உழவர் சந்தை, மார்க்கெட் பகுதிகளில் நவீன தானியிங்கி கிருமி நாசினி இயந்திரம் அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வெளியூர் செல்வதற்கான அனுமதி சீட்டு பெறுவதெற்கென பொதுமக்கள் அதிகம் வந்து செல்கின்றனர். இந்நிலையில் என்டர்பிரனெர்ஸ் அசோசியேசன் சார்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சுமார் ஒரு இலட்சம் ரூபாய் செலவில் தானியங்கி கிருமி நாசினி இயந்திரம் அமைக்கப்பட்டுள்ளது.இதனை மாவட்ட ஆட்சியர் கு.இராசமணி துவக்கி வைத்தார்.இதன் வழியாக உள்ளே நுழையும் போது இயந்திரத்தின் மேலே பொருத்தப்பட்டுள்ள ஸ்பிரேயரில் இருந்து வரும் கிருமி நாசினி மக்கள் மீது தெளிக்கும். இதற்காக அருகில், பாரல்களில் கிருமி நாசினி மருந்து தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள மின் மோட்டார் மூலம் ஸ்பிரேயருக்கு மருந்து செல்லும் வகையில் இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதால்,இதன் வழியாக பொதுமக்கள் செல்லும் போது கிருமி நாசினி தெளிக்கப்படுவதால் நோய் பரவாமல் தடுக்க இந்த இயந்திரம் ஏதுவாக இருக்கும் என இதனை நிறுவிய அமைப்பின் தலைவர் ரஜினி காந்த் தெரிவித்தார். இதன் ஒருங்கிணைப்பில் அமைப்பின் நிர்வாகிகள் பிரகாஷ்,அனீஷ்,பென் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க