March 17, 2020
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யபட்டன.
கொரோனா பாதிப்பால் அனைத்து நிறுவனங்கள், பொது இடங்களில் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பள்ளிகள், திரையரங்குகள், மால்கள் போன்றவையும் மார்ச் 31ம் தேதி வரை மூட அரசும் உத்தரவிட்டுள்ளது. மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பொது இடங்களில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக மக்கள் அதிகம் வருகின்ற கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முழுவதும் இன்று கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டன. ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள திட்டுகள், கழிவறைகள், மரங்கள், செடிகள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டன. நடைபாதை ஓரங்களில் கிருமி நாசினி பவுடர்கள் போடபட்டன.