March 2, 2020
கோவை கூட்ஸ்செட் சாலையில் உள்ள பிரசன்டேசன் பள்ளியில் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுவதை பார்வையிட்ட பின், மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது பேசிய அவர் ,
கோவை மாவட்டத்தில் 119 மையங்களில் 34 ஆயிரத்து 900 பேர் தேர்வு எழுதுகின்றனர்.24 ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.
நல்ல முறையில் தேர்வு நடக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.மாணவர்கள் சிரமமின்றி தேர்வு எழுத வசதிகளும், ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. 11 வகுப்பு தேர்வு 4 ம் தேதியும், 10 ம் வகுப்பு 27 ம் தேதியும் நடைபெறுகிறது. அனைத்து தேர்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.