• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கு நீரா பானம் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான உரிமம் விரைவில் வழங்கப்படும் – மாவட்ட ஆட்சியர்

February 15, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் தென்னை விவசாயிகளுக்கான நீரா பானம் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான உரிமம் விரைவில் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டத்தில் சுமார் 87 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவில் தென்னை சாகுபடி நடைபெற்று வருகிறது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, தென்னை விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் வகையில், நீரா பானம் இறக்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரிடம் 3 நிறுவனங்கள் தென்னை நீரா பானம் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான அனுமதி கோரி, விண்ணப்பங்களை வழங்கினர். இந்நிறுவனங்கள் தயாரித்த நீரா பானத்தை சுவைத்து பார்த்த மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன், ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் நீரா உற்பத்தி மற்றும் விற்பனைக்கான உரிமம் வழங்கப்படுமென தெரிவித்தார்

இது குறித்து ஆனைமலை தென்னை விவசாயிகள் நிறுவனத்தின் தலைவர் தனபால் கூறுகையில்,

“நீரா பான உற்பத்தி தென்னை விவசாயிகளுக்கு கூடுதல் வருவாயை அளிக்கும் எனவும், இந்தாண்டில் தினசரி ஆயிரம் லிட்டர் நீரா தயாரிக்கவும், அடுத்து வரும் ஆண்டுகளில் உற்பத்தி அதிகரிக்க இலக்கு நிர்ணயித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும்,நீரா பானத்தின் விலை ஒரு லிட்டருக்கு சுமார் நூறு ரூபாய் என நிர்ணயிக்கப்படலாம்” எனவும் அவர் தெரிவித்தார்.

 

மேலும் படிக்க