• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாநகர காவல் துறையினரின் குழந்தைக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று தொடங்கியது.

April 6, 2017 தண்டோரா குழு

கோவை மாநகர காவல் துறையில் பணிபுரியம் காவல்துறையினரின் குழந்தைகளில் பத்தாம் வகுப்பு, பனிரெண்டாம் வகுப்பு படிப்பை படித்து முடித்துவிட்டு மேல்படிப்பிற்காக காத்திருப்பவர்கள் அடுத்து என்ன படிக்கலாம்,எங்கு படிக்கலாம் என்பது குறித்த விழிப்புணர்வு நிகிழ்ச்சி கோவை பி.எஸ்.ஜி கல்லூரி அரங்கில் கோவை மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உத்தரவின் பேரில் இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் 277 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு எதில் விருப்பம் உள்ளது, அதில் அவர்களின் திறமை எவ்வாறு உள்ளது என்பனவற்றை அறிந்து அவர்களுக்கான ஆலோசனை வழங்கப்பட்டது. இன்றும் நாளையும் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் லட்சுமி தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார். பி.எஸ்.ஜி கல்லூரி முதல்வர் கிரிராஜ் இந்நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.

மேலும் படிக்க