• Download mobile app
09 May 2026, SaturdayEdition - 3741
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் நள்ளிரவில் ஜாமினில் விடுதலை

March 24, 2020 தண்டோரா குழு

கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் நள்ளிரவில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா அச்சுறுத்தலை தவிர்க்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

இந்நிலையில்,கொரோனா முன்னெச்சரிக்கையாக சிறையில் கூட்டத்தை குறைக்கும் வகையில் கோவை மத்திய சிறையில் இருந்து 136 கைதிகள் நள்ளிரவில் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
விசாரணைக் கைதிகளாக இருந்தவர்கள் நீதிமன்ற உத்தரவின்படி ஜாமினில் விடுதலை செய்யப்பட்டதாக சிறைகண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க