• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை ப்ரூக் பீல்ட் திரையேட்டருக்கு விடிட் அடித்த பேச்சுலர் குழுவினர் !

December 11, 2021 தண்டோரா குழு

ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் அறிமுக இயக்குனர் சதீஷ் செல்வகுமார் இயக்கத்தில் வெளியான படம்பேச்சுலர்.கடந்த வாரம் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியிலும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் நாயகியாக திவ்யபாரதி நடித்துள்ளார்.

இந்தநிலையில்,இப்படக்குழுவினர் கோவையில் உள்ள பல்வேறு திரையங்குகளுக்கு சென்று ரசிகர்கள் முன் தோன்றி நன்றி தெரிவித்தனர்.

இது குறித்து இயக்குனர் சதீஷ் செல்வகுமார் கூறுகையில்,

இப்படம் என் நண்பரின் வாழ்வில் நடந்த நிஜமான கதையாகும்.தற்போது படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நான் எதிர்பார்த்ததைவட ரசிகர்கள் நல்ல வரவேற்பு கொடுத்து வருகிறார்கள். இது எனக்கு மேலும் ஊக்கம் அளித்து உள்ளது. என்னை நம்பி வாய்ப்பளித்த படத்தின் தயாரிப்பாளருக்கும் ரசிகர்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்.

படத்தின் நாயகி திவ்யபாரதி கூறும்போது,

அறிமுக திரைப்படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.ஜிவி பிரகாஷுடன் இணைந்து நடித்தது நல்ல அனுபவம் கிடைத்துள்ளது. தற்போது மேலும் இரண்டு படங்களில் நடித்து வருகிறேன்.விரைவில் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். நகர்ப்புற மட்டுமல்லாமல் கிராமப்புற கதாபாத்திரம் கிடைத்தாலும் எடுத்து நடிப்பேன் என்றார்.

மேலும் படிக்க