• Download mobile app
06 Sep 2026, SundayEdition - 3861
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை தனியார் நிறுவனத்தின் 3 வது மாடியில் ஏற்பட்ட தீ விபத்து: பொருட்கள் தீயில் எரிந்து நாசம்

July 12, 2023 தண்டோரா குழு

கோவை காந்திபுரம் கிராஸ் கட் சாலை சந்திப்பு பகுதியில் பிரபல வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை தனியார் நிறுவனம் ( Vasanth and co) செயல்பட்டு வருகிறது.ஒரே கட்டிடத்தில் தனியார் உணவகம் ( ஆனந்தாஸ்), செல்போன் கடை (Chennai mobile) உள்ளிட்ட கடைகளும் செயல்பட்டு வரும் நிலையில் உணவகம் கட்டிடத்தில் பணிகள் நடைபெற்று வந்தது. அதில் கேஸ் வெல்டிங் பணி செய்யும் போது அங்கு இருந்து தீப்பொறி அருகில் மூன்றாவது தளத்தில் செல்போன் கடைசியில் வைக்கப்பட்டு உள்ள ஏ.சி இயந்திரத்தில் தீப்பொறி பட்டு விபத்து ஏற்பட்டு உள்ளது.

மேலும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை தனியார் நிறுவனம் ( Vasanth and co) அதன் அருகே வைத்து இருந்த அட்டைப் பெட்டிகள் மீது பட்ட தீ மேலும் பரவியது இதனால் அங்கு பெரும் புகை மூட்டம் கிளம்பியதைத் தொடர்ந்து அங்கு இருந்தவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் விரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் இரண்டு வாகனங்கள் மூலம் தீ மேலும் பரவாமல் அனைத்து பெரும் சேதத்தை தவிர்த்தனர்.

தீ விபத்தால் ஏ.சி இயந்திரங்கள் மற்றும் அங்கு வைக்கப்பட்டு இருந்த அட்டைப் பெட்டிகள் உள்ளிட்டவை எரிந்து சேதம் அடைந்தன. கட்டிடத்தின் அருகே அடுத்தடுத்து கடைகள் செயல்பட்டு வரும் நிலையில் துரிதமாக தீ அணைக்கப்பட்டதால் தீ எங்கும் பரவாமல் தடுக்கப்பட்டதுடன் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க