• Download mobile app
25 Jul 2026, SaturdayEdition - 3818
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை சுகுணாபுரம் பகுதியில் சிறுத்தை நடமாட்டம் – மக்கள் அச்சம் !

November 29, 2021 தண்டோரா குழு

கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே சுகுனாபுரம் பகுதி உள்ளது.
இந்த சுகுணாபுரம் மலை பகுதிகளில் எண்ணற்ற மக்கள் வசித்து வருகின்றனர்.

இங்குள்ள சுகுணாபுரம் கிழக்குப் பகுதியில் தன்னாசி ஆண்டவர் திருக்கோவில் அமைந்துள்ளது.நேற்று இரவு அவ்வழியே வந்த ஒருவர் தன்னாசி ஆண்டவர் கேட்டின் மேல் ஏதோ மிருகம் படுத்திருந்தை பார்த்தார். மீண்டும் உற்று நோக்கியபோது அது சிறுத்தை என அறிந்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து அவர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தார். வனத்துறையினர் அங்கு வந்து பார்த்த போது கோயிலின் கேட்டின் மேல் கால் தடமும் சிறுத்தை நடமாட்டத்திற்கான அறிகுறிகள் இருப்பதையும் உறுதி செய்து அவ்விடத்திற்கு மக்கள் யாரும் செல்லக்கூடாது என அந்த கோவில் பகுதி கேட்டை பூட்டிச் சென்றுள்ளனர்.
சிறுத்தை வந்த செய்தியால் அப்பகுதி பரபரப்பு அடைந்துள்ளது.

மேலும் படிக்க