February 15, 2020
கோவை கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 1389 மாணவர்களுக்கு பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் பட்டங்களை வழங்கினார்.
கோவை கவுண்டம்பாளையம் பகுதியில் கொங்குநாடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியானது அமைந்துள்ளது.பாரதியார் பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டுள்ள இக்கல்லூரியில் 13ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரியின் வளாகத்தில் இன்று நடைபெற்றது. இதில் 1077 மாணவர்களுக்கு இளநிலை பட்டங்களும்,312 மாணவர்களுக்கு முதுகலை பட்டங்களும் வழங்கபட்டது..
இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட பாரதியார் பல்கலை கழக துணைவேந்தர் காளிராஜ் 13898 மாணவர்களுக்கும் பட்டங்களை வழங்கி பின் பேசிய அவர் மாணவ மாணவிகள் தற்போது தான் நம்பிக்கை உள்ள வாழ்க்கையை தொடங்கி உள்ளீர்கள் என்றும்,இந்த பட்டத்தின் மூலம் நீங்களே வேலைவாய்ப்பிணை ஏற்படுத்திகொண்டு தொழில்கலை தொடங்கி பின் வரும் மாணவர்களுக்கு வேலைவைப்பினை அளித்து முன் உதாரணமாக திகழ வேண்டும் என்று கேட்டு கொண்டார்.
மாணவர்களுக்கு இப்பட்டமளிப்பு விழாவில் கல்லூரியின் இயக்குனர் வாசுகி,முதல்வர் லக்ஷ்மணசாமி மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், மாணவர்கள் மாணவிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.