• Download mobile app
18 May 2024, SaturdayEdition - 3020
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை குண்டுவெடிப்பில் இறந்தவர்களுக்கு விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் திதி

February 14, 2018 தண்டோரா குழு

கோவை தொடர் குண்டு வெடிப்பில் இறந்தவர்களுக்கு விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பில் தொண்டர்கள் 20ம் ஆண்டாக திதி கொடுத்து நினைவஞ்சலி செலுத்தினர்.

கடந்த 1998 ஆம் ஆண்டு  எதிர்கட்சி தலைவராக இருந்த  அத்வானியை கொல்ல தொடர் குண்டு வெடிப்ப முயற்சிகள் கோவையில் நடைபெற்றது. இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஒன்றும் அறியாத பெரியவர்கள்,  குழந்தைகள்  என 50 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.

இந்த தொடர் குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய விஷ்வ ஹிந்த் பரிஷத் சார்பாக பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் அதன் தொண்டர்கள்  20 ஆம் ஆண்டாக திதி கொடுத்து அஞ்சலி செலுத்தினர்.

கோவையின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் வகையில் நடந்த இந்த  குண்டு வெடிப்பு  வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் நன்னடத்தை விதியின் கீழ் விடுதலை செய்யக்கூடாது என வலியுறுத்தினர். மேலும் இறந்தவர்களின் நினைவாக ஆர் எஸ் புரம் டி பி ரோட்டில் நினைவுத்தூண் அமைக்க அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

 

மேலும் படிக்க