• Download mobile app
10 Nov 2025, MondayEdition - 3561
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை உக்கடம் வாலாங்குளத்தில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்பு

November 25, 2020 தண்டோரா குழு

கோவை உக்கடம் வாலாங்குளத்தில் , உடல் அழுகிய நிலையில் மிதந்த ஆண் சடலத்தை உக்கடம் போலீஸார் மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கோவை உக்கடம் வாலாங்குளத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் குளத்தில் ஒரு பகுதியில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மிதப்பதாக உக்கடம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்குச் சென்ற போலீஸார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மீட்கப்பட்டவர் சுமார் 40 – 50 வயது மதிக்கத்தக்க ஆண் என்றும், அவர் இறந்து சில நாட்களுக்கு மேல் ஆகி இருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க