• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை உக்கடத்தில் வீடுகளை காலி செய்ய மறுத்து கண்டித்து மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்ட பொதுமக்கள்

February 1, 2019 தண்டோரா குழு

மேம்பால பணிகளுக்காக வீடுகளை காலி செய்து இடமாற்றம் செய்யப்படுவதை கண்டித்து பொதுமக்கள், மாநகராட்சி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

கோவை பாலக்காடு சாலையில் உக்கடம் முதல் ஆத்துப்பாலம் வரை 1.7 கிலோமீட்டர் நீளத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்பாலம் கட்ட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக உக்கடம் பகுதியில் செயல்பட்டு வந்த பழ மார்க்கெட் ஏற்கனவே இடித்து வேறு இடத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் அருகாமையில் உள்ள சி.எம்.சி காலனி பகுதியில் உள்ள வீடுகளை அகற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கணக்கெடுப்பு பணிக்காக இன்று மாநகராட்சி அதிகாரிகள் சி.எம்.சி காலனி பகுதிக்கு சென்றனர். இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கணக்கெடுப்பு பணிக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மாநகராட்சி துப்புறவு பணியாளர்களும் அருந்ததியினர் மக்களும் அதிகளவில் வசிக்கும் இப்பகுதியில் இருந்து பொதுமக்களை வேறு இடத்திற்கு இடம்பெயர வைத்தால் வாழ்வாதாரம் பாதிக்கும் என தெரிவித்துள்ள அப்பகுதியினர் தங்களுக்கு மீன் மார்க்கெட் பகுதியை காலிசெய்து அங்கு வீடுகள் கட்டி தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பாக ஆட்சியாளர்களிடமும், அதிகாரிகளிடமும் பல முறை முறையிட்டும் அதனை செவிமடுக்காமல் தற்போது கணக்கெடுப்பு பணிகளில் அதிகாரிகள் ஈடுபடுவதாகவும் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

மேலும் படிக்க