• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை இரயில் நிலையத்தில் 24 மணி நேரமும் இயங்கும் அவசர கால முதலுவதவி சிகிச்சை மையம் திறப்பு

January 30, 2019 தண்டோரா குழு

கோவை இரயில் நிலையத்தில் ராயல் கேர் மருத்துவமனை சார்பில், 24 மணி நேரம் இயங்கும் இலவச முதலுதவி சிகிச்சை மையம் துவங்கப்பட்டது. இதற்கான துவக்க விழா கோவை இரயில் நிலைய வளாகத்தில் நடைபெற்றது.

முதலுதவி சிகிச்சை மையத்தை ராயல் கேர் மருத்துமனையின் தலைவர் மாதேஸ்வரன் துவக்கி வைத்து,

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இந்த மையம் இரயில் பயணிகளுக்கு ஏற்படும் உடல்நலக் குறைவுக்கு உடனடி சிகிச்சை அளிக்க, 24 மணி நேரமும் இயங்கும். முதலுதவியுடன், மேல் சிகிச்சை தேவைப்படும் பயணிகள், வெளியில் உள்ள மருத்துவமனைக்கு தாமதமின்றி அனுப்பிவைப்பதற்கு ஆம்புலன்ஸ் வசதியும் செய்யப்பட்டு உள்ளது. இதயம் மற்றும் இன்ன பிற நோயால் பாதிக்கப்படுபவர்களை கோல்டன் ஹவர்ஸ் எனப்படும் சரியான நேரத்தில் சிகிச்சை அளித்து மேல் சிகிச்சைக்கு நோயாளிகள் விரும்பும் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் இரயில் நிலைய அதிகாரிகள் செந்தில் குமார்,சிட்டிபாபு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க