• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை அருகே காட்டுக்குள் இருந்து வந்த மானை கடித்த நாய்களிடமிருந்து காப்பாற்றிய பொதுமக்கள்

March 3, 2018 தண்டோரா குழு

கோவை மாவட்டம் மேற்கு மலைதொடர்ச்சியை ஒட்டி இருக்கும் வன பகுதிகளில் இருந்து  விலங்குகள் அடிக்கடி ஊருக்குள் வருவது வாடிக்கையாகியுள்ளது.

இந்நிலையில் இன்று(மார்ச் 3)அதிகாலை பாலக்காடு ரோட்டிலுள்ள மதுக்கரை மைல்கல் அருகே  வனப்பகுதியில் இருந்து மான்கள் கூட்டமாக ஊருக்குள் வந்துள்ளது.இதனையடுத்து அங்கிருந்த தெருநாய்கள் மான் கூட்டத்தை தூரத்தியதை அடுத்து மான்கள் மீண்டும் காட்டிற்குள் ஒட்டின. இதில் ஒரு புள்ளி மான் மட்டும் நாய்களிடம் சிக்கியுள்ளது.

நாய்கள் புள்ளி மானை கடிப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், மானை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.இதனையடுத்து மானுக்கு கால்நடைத்துறை மருத்துவர்கள் சிகிச்சையளித்தனர்.பின்பு வனத்துறையினர்  மட்டத்துக்காடு வனப்பகுதியில் மானை விட்டனர்.

மேலும் படிக்க