• Download mobile app
17 Jun 2025, TuesdayEdition - 3415
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் ரயில் மறியலில் ஈடுபட்ட 700 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கதினர் கைது

January 9, 2019

மத்திய மாநில அரசுகளை கண்டித்து ரயில்நிலையம் முற்றுகை மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட 700 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கதினரை போலீசார் கைது செய்தனர்.

விவசாய விளை பொருட்களுக்கு குறைந்த பட்ச ஆதார விலை வழங்க வலியுறுத்தியும், தொழிலாளர்களுக்கு குறைந்த பட்சமாக 18,000 ரூபாய் மாத ஊதியம் வழங்கக்கோரியும், அனைவருக்கு சமூக பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாவதை கண்டித்து மத்திய தொழிற்சங்கள் 48 மணி நேர தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக 25 க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள், பொதுத்துறை ஊழியர்கள் கோவை ரயில் நிலைய முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது மத்திய அரசு மற்றும் பாரதப்பிரதமர் மோடியை கண்டித்து கோசங்களை எழுப்பினர். ரயில் நிலையத்தின் நுழைவாயில் முன்பு அமர்ந்து இருபது நிமிடங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் போக்குவரத்து முப்பது நிமிடங்களுக்கு மேலாக பாதிக்கப்பட்டது. இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட 70 பெண்கள் உள்பட 700 க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

மேலும் படிக்க