• Download mobile app
17 May 2024, FridayEdition - 3019
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் முப்பதாவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி விழிப்புணர்வு நிகழ்ச்சி

February 9, 2019 தண்டோரா குழு

கோவையில் முப்பதாவது சாலை பாதுகாப்பு வார விழாவையொட்டி கோவை கா௫ன்யா கல்லூரி மாணவ மாணவிகள் 15 விதிமுறைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை மற்றும் தனியார் கல்லூரி சார்பில் கோவையில் முப்பதாவது சாலை பாதுகாப்பு வார விழா டவுன்ஹால் பஸ்நிலையம் அ௫கில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் பெரியசாமி ,மற்றும் காவல்துறை அதிகாரிகள் மற்றும் கா௫ன்யா நிகர்நிலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் மன்னார் ஜவகர் சிறப்பு வி௫ந்தினராக கலந்துகொண்டு விழிப்புணர்வு பேனரில் கையெழுத்துட்டனர்.

பின்னர், கல்லூரி மாணவ மாணவிகள் பொதுமக்களுக்கு மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது, செல்போன் பேசிக் கொண்டு வாகனத்தை இயக்க கூடாது, சிக்னல் விளக்குகளை மதித்து நடக்க வேண்டும், பாதுகாப்பான வேகத்திலேயே செல்ல வேண்டும், சாலை விதிகளை கடைபிடிக்க வேண்டும் ஆகிய 15 விதிமுறைகள் அடங்கிய பதாகைகளை ஏந்தியும் மேலும் இதை விளக்கும் வகையில் துண்டு பிரசுரங்களையும் பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் வழங்கினர்.

மேலும் இத்துடன் தமிழக அரசு அமல்படுத்தி உள்ள பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வகையில் துணியிலான பைகளையும் வாகன ஓட்டிகளுக்கு வழங்கினர்.

மேலும் படிக்க