March 17, 2020
கோவையில் பதட்டத்தை தடுக்க இரவில் முக கவசம் அணிந்து முக்கிய இடங்களில் போலீசார் வாகன சோதனை மற்றும் கடையடைப்பு ஈடுபட்டனர்.
கோவை நகர் பகுதிகளில் பதட்ட நிலை இருக்கிறது இரு அமைப்புகளை சேர்ந்தவர்களின் மோதல், வாகனம் மீது கல் வீச்சு, மற்றும் போராட்டம் சம்பவம் தொடர்கிறது.நகரின் பதட்ட நிலையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர போலீஸ் சோதனை கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நகர்ப்பகுதிகளில் 16 செக் போஸ்ட்களில் வாகன தணிக்கை நடக்கிறது.
ஓட்டல் லாட்ஜ்களில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. ஹோட்டல்களில் தங்கும் நபர்கள் குறித்து விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. சந்தேக நபர்களிடம் விசாரணை நடத்தப்படுகிறது. இரவு பகலாக கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது தினமும் 1200 போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.