• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3000க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கைது

January 24, 2019 தண்டோரா குழு

கோவையில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாவது நாளாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 3000க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 21 மாத நிலுவை தொகையினை வழங்க வேண்டும், இடைநிலை ஆசிரியர்களை எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு பணி அமர்த்த கூடாது என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தமிழகம் முழுவதும் மூன்றாவது நாளாக காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தின் ஒரு பகுதியாக கோவை மாவட்டம் முழுவதும் இருந்து ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக குவிந்தனர்.இதன் காரணமாக அப்பபகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனால். போக்குவரத்து வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டது.

இதையடுத்து, ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக மறியலில் ஈடுபட்டனர். அப்போது தமிழக அரசு உடனடியாக ஜாக்டோ ஜியோ அமைப்பின் நிர்வாகிகளை அழைத்து பேச வேண்டும் என வலியுறுத்தினர். தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்த அவர்கள் அரசு உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். நீதிமன்றம் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதே தவிர உத்திரவிட வில்லை எனவும் எனவே போராட்டம் தொடரும் எனவும் ஆசிரியைகள் தெரிவித்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கிணத்துகடவு, அன்னூர் உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த 3000 க்கும் மேற்பட்ட ஜாக்டோ ஜியோ அமைப்பினர் கலந்து கொண்டனர். இதனையடுத்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் அனைவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க