• Download mobile app
23 Jul 2026, ThursdayEdition - 3816
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் மது போதையில் வாகனம் ஓட்டிய 141 பேர் மீது வழக்கு

June 30, 2023 தண்டோரா குழு

0பகோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின் பேரில் சாலை விபத்து தடுப்பு மற்றும் போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மது போதையில் வாகனம் ஓட்டுதல் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், ஒரு வழிப்பாதை, பாதசாரிகளுக்கான குறுக்கு நடைபாதைகள் உள்ளிட்ட பல்வேறு போக்குவரத்து சீரமைப்பு நடவடிக்கை மாநகரம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக,நேற்று முன் தினம் இரவில் இருந்து,கோவை மாநகரம் முழுவதும் தீவிர வாகன சோதனை மேற்கொள்ளப்பட்டது.
42 இடங்களில் வாகன சோதனை நடத்தப்பட்டது. மது போதையில் வாகனம் ஓட்டியது தொடர்பாக 141 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மது குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதைத் தவிர்க்க இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் வருவோர், தங்களை அழைத்து செல்வதற்கு வசதியாக வாகன ஓட்டிகளை வைத்து கொள்ள வேண்டும்.
மாநகரில் உள்ள மதுபானக்கூடங்களின் உரிமையாளர்கள், தங்களின் மதுபானக் கூடங்களுக்கு வருவோர்களிடம், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது எனவும், அழைத்துச் செல்ல ஒரு நபரை கூட்டி வரவேண்டும் எனவும், அவ்வாறு, வாகன ஓட்டிகளுடன் வராதவர்களுக்கு, மதுபானக்கூடங்களின் உரிமையாளர்கள் நம்பிக்கையான வாகன ஓட்டிகளை ஏற்பாடு செய்து தர வேண்டும் என போலீசார் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் படிக்க