• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு , நீச்சல் மற்றும் படகு போட்டி

January 14, 2019 தண்டோரா குழு

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீச்சல் போட்டி , படகு போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்குபெற்றனர்.

கோவையை அடுத்த சூலூர் பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூலூர் பகுதியில் உள்ள படகு இல்லத்தில் இளைஞர்களுக்கான நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதனையடுத்து படகு இல்லத்தில் படகு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பலரும் கலந்து கொண்டு ஆர்வமுடன் படகை வேகமாக செலுத்தி தங்களது இலக்கை அடைந்தனர். ஏராளமான பொதுமக்கள் போட்டிகளை கண்டுகளித்தனர்.

மேலும் படிக்க