January 14, 2019
தண்டோரா குழு
கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நீச்சல் போட்டி , படகு போட்டி உள்ளிட்ட போட்டிகள் நடைபெற்றதில் ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் பங்குபெற்றனர்.
கோவையை அடுத்த சூலூர் பகுதியில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பல்வேறு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சூலூர் பகுதியில் உள்ள படகு இல்லத்தில் இளைஞர்களுக்கான நீச்சல் போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான இளைஞர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். பின்னர் போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இதனையடுத்து படகு இல்லத்தில் படகு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டியில் பலரும் கலந்து கொண்டு ஆர்வமுடன் படகை வேகமாக செலுத்தி தங்களது இலக்கை அடைந்தனர். ஏராளமான பொதுமக்கள் போட்டிகளை கண்டுகளித்தனர்.