• Download mobile app
27 Mar 2026, FridayEdition - 3698
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் பெண்ணிடம் 13 பவுன் தங்கநகை மற்றும் நிலங்கள் அபகரிப்பு – போலீசில் புகார்

January 25, 2019 தண்டோரா குழு

கோவையில் வாடகை வீட்டில் குடியிருந்து வரும் பெண் பேச்சுவார்த்தைகள் கொடுத்து 13 பவுன் தங்க நகை மற்றும் நிலங்களை அபகரித்தது பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை கிணத்துக்கடவு அடுத்துள்ள கோவில் பாளையத்தை சேர்ந்த ரேவதியின் மகள் சுவாதி என்பவர் வசித்து வருகிறார். இதில் ரேவதி என்பவருக்கு கண் பார்வை குறைவாகவே காணப்படுகின்றன. இவரின் வீட்டிற்கு எதிரே வாடகை வீட்டில் வசித்து வரும் சாந்தி என்பவர் தனக்கு எந்த ஆதரவும் இன்றி தனியாக வாழ்ந்து வருவதாக கூறி பேச்சுவார்த்தை கொடுத்து 2 லட்சம் கடன் உள்ளதாகவும் அதை அடைப்பதற்கு தனக்கு பணம் வேண்டுமென்று கேட்டுள்ளார். இதனால் இரக்கம் கொண்ட ரேவதி வீட்டிலிருந்த 13 பவுன் தனது வீட்டிற்கு தெரியாமல் கொடுத்துள்ளார்.

இரண்டு நாட்களில் மீண்டும் நகைகளை கொடுப்பதாக கூறி மாத வட்டியினை அவற்றிற்கான தொகையினை சாந்தி செலுத்துவதாகக் கூறி ரேவதியின் முழு சொத்தினை கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டு தற்போது அவர்கள் மிரட்டுவதாக கூறியும் தங்களது நகை மற்றும் சொத்துக்களை மீட்டுத்தரக் கோரியும் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் குடும்பத்துடன் வந்து ரேவதி மனு அளித்துள்ளார்.

மேலும் படிக்க