• Download mobile app
12 Jun 2025, ThursdayEdition - 3410
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவையில் புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு

November 16, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் கடந்த முறை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 21,190 பேர் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். திமுக சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் வரைவு வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொண்டார்.இன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,97,0733 பேர் இருக்கின்றனர். ஆண் வாக்காளர்1,46,8,222 பேரும்,
பெண் வாக்காளர் 1,50,2,142 பேரும் ,இதரர் 369 பேரும் இருக்கின்றனர்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் இருந்த வாக்காளர் எண்ணிக்கையினை விட 21190 பேர் நீக்கப்பட்டு இருக்கின்றனர். இது தொடர்பாக பேட்டியளித்த ஆட்சியர் இறப்பு, இடமாற்றம், இரு முறை பதிவு போன்றவை காரணமாக நீக்கம் அதிகமாக இருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். மேலும் வாக்காளர் சேர்ப்பு , நீக்கம் போன்றவற்றிக்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க