கோவை மாவட்டத்தில் கடந்த முறை வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலை விட இன்று வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 21,190 பேர் பல்வேறு காரணங்களால் நீக்கப்பட்டு இருப்பதாக ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி இன்று வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். திமுக சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கார்த்திக் வரைவு வாக்காளர் பட்டியலை பெற்றுக்கொண்டார்.இன்று வெளியிட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் மொத்த வாக்காளர் எண்ணிக்கை 2,97,0733 பேர் இருக்கின்றனர். ஆண் வாக்காளர்1,46,8,222 பேரும்,
பெண் வாக்காளர் 1,50,2,142 பேரும் ,இதரர் 369 பேரும் இருக்கின்றனர்.
ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் இருந்த வாக்காளர் எண்ணிக்கையினை விட 21190 பேர் நீக்கப்பட்டு இருக்கின்றனர். இது தொடர்பாக பேட்டியளித்த ஆட்சியர் இறப்பு, இடமாற்றம், இரு முறை பதிவு போன்றவை காரணமாக நீக்கம் அதிகமாக இருப்பதாக ஆட்சியர் தெரிவித்தார். மேலும் வாக்காளர் சேர்ப்பு , நீக்கம் போன்றவற்றிக்கு உரிய கால அவகாசம் கொடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
வரும் 16ம் தேதி கோவை மாவட்ட காவல்துறையின் வாகன பொது ஏலம் நடைபெறுகிறது
கோவை மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் முகாமில் 26 மனுக்கள் மீது சுமூகமான முறையில் தீர்வு
காஞ்சி மகாபெரியவரின் 131 ஆவது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு ஹோமம், பாராயணம் நிகழ்ச்சி
பிஎஸ்ஹெச் ஹோம் அப்ளையன்சஸ்ஸின் முதல் சீமென்ஸ் பிராண்ட் ஸ்டோர் கோவையில் திறப்பு
கேரளாவில் இருந்து மருத்துவக் கழிவுகள் கொண்டுவரப்பட்டதாகப் பரவும் பொய்யான தகவல்
இரவு ரோந்து பணியில் கோவை மாவட்ட காவலர்களின் விழிப்புணர்வு:கையும் களவுமாக பிடிபட்ட திருடர்கள் – மாவட்ட எஸ்.பி பாராட்டு