• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் புதிதாக துவங்கப்பட்டுள்ள இயற்கை அறிவியல் நிறுவனம்

January 23, 2018 தண்டோரா குழு

கோவையில் இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டி இயற்கை அறிவியல் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

கோவையில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களிடையே இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டியும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டியும் இயற்கை அறிவியல் நிறுவனம் துவங்கப்பட்டுள்ளது.

கோவை சித்தாபுதூர் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைப்பெற்ற துவக்க விழாவில் நிறுவன தலைவர் ராஜலட்சுமி ஜெகதீசன் தலைமையில், கோவை பாரதியார் பல்கலை கழக துணைவேந்தர் முனைவர் கணபதி விழா மடலை வெளியிட்டு பேசினார்.

இயற்கை அறிவியல் நிறுவனம் இயற்கை,விவசாயம்,கலாச்சாரம்,பண்பாடு ஆகியவை குறித்த விழிப்புணர்வை பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடை கொண்டு சேர்ப்பதே இதன் நோக்கமாகும். மேலும், பல்வேறு இயற்கையை பாதுகாப்பது குறித்த போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகளும் இந்நிறுவனத்தின் மூலமாக வழங்கப்படும் என நிர்வாகிகள் தெரிவித்தனர்.பின்னர் இது குறித்து பேசிய துணை வேந்தர் கணபதி இது போன்ற முயற்சிகளை தாம் வரவேற்பதாக குறிப்பிட்டார்.

மேலும் படிக்க