• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் பார்வையாளர்களை கவர்ந்த வேளாண் திருவிழா 20

January 4, 2020 தண்டோரா குழு

கோவையில் உழவு தொழிலை ஊக்குவிக்கும் வகையில் நடைபெறும் ”வேளாண் திருவிழா 20 ” பார்வையாளர்களை கவரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

உககில் உள்ளஅனைவருக்கும் உயிர்த் தேவையான உணவிற்கு, உழவே காரணம். அத்தகைய சிறப்பு வாய்ந்த உழவைக் கொண்டாட திரு. செ. செங்கோட கவுண்டர் கல்வி அறக்கட்டளையும், இந்த அறக்கட்டளையால் நடத்தப்படும் கோவை L & T பைபாஸ் ரோட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியும் இணைந்து வழங்கும் நாண்காவது ஆண்டு வேளாண் திருவிழா “20” , 2020 எனும் தலைப்பில் ஜனவரி மாதம் 4, 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் நடைபெற்று வருகிறது.

மூன்று நாட்கள் பிரம்மாண்ட விழாவாக நிகழ உள்ள இந்த வேளாண் திருவிழா ஸ்ரீசக்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.இயற்கை வேளாண்மையை ஊக்குவிப்பதும், இயற்கை வேளாண்மை சார்ந்த அறிவியல் தொழில்நுட்பங்களைப் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் இவ்விழாவின் முக்கிய நோக்கமாகும்.

ஜனவரி 4 வேளாண் திருவிழாவுக்கான கொடியேற்றம் நடைபெற்றது. 108 பசு வழிபாட்டுடன் விழா துவங்கியது. ஜனவரி 5 – ம் தேதி பசுமாடு, காளைகள் மற்றும் எருமை மாடு உள்ளிட்ட கால்நடைக் கண்காட்சி மற்றும் பரிசுப் போட்டியும் நடைபெற உள்ளது .இந்த திருவிழாவில் நாட்டு நாய்கள், குதிரை, கிடா மற்றும் சண்டை சேவல் கண்காட்சி மற்றும் பரிசுப் போட்டி நடைபெற உள்ளது. முந்நூறுக்கும் மேற்பட்ட கால்நடைகள் கலந்துகொள்ள உள்ளன.

கோவை வேளாண் கண்காட்சி
உழவுக்கு உலகம் தோன்றிய நாள் முதல் நெடிய வரலாறு உண்டு. அந்த வரலாற்றைக் கொண்டாடும் இத்திருவிழாவின் முக்கிய அம்சமாக விவசாயத்தை மேம்படச் செய்யும் வகையில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய அறிவியல் தொழில்நுட்ப மென்பொருள்கள், கருவிகள் வேளாண் வர்த்தகக் கண்காட்சியில் இடம்பெற்று வருகின்றன

மேலும் விவசாயிகளுக்கு வழங்கப்படும் பல்வேறு மானியங்கள் பற்றியும், வேளாண் கடன்களைக் குறைந்த அளவு வட்டி விகிதங்களில் பெறுவது பற்றியும் தகவல்களைக் கொண்டு சேர்க்கும் விதமாக பல்வேறு வங்கிகள் இவ்விழாவிற்கு வருகை தர உள்ளன. இந்த வேளாண் கண்காட்சி ஜனவரி 4, 5 மற்றும் 6 ஆகிய மூன்று நாட்களிலும் நடைபெற்று வருகின்றது

வெள்ள இடர் மேலாண்மை, விளைபொருட்களுக்கு மதிப்புக் கூட்டுதல், இயற்கைக்கு ஏன் மாற வேண்டும் ஆகிய மூன்று தலைப்புகளில் கருத்தரங்குகளும் நடைபெற உள்ளது . மேலும் வேளாண் திருவிழாவின் மூன்றாம் நாளான நிறைவு நாளில் ரேக்ளா போட்டிகள் நடைபெற உள்ளதாகவும், ரேக்ளா போட்டியில் பங்குபெற முன்பதிவு ஜனவரி 5ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்குகிறது எனவும், இந்த ரேக்ளா போட்டிகளில் 300க்கும் அதிகமான வண்டிகள் கலந்து கொள்ள இருப்பதாகவும், இந்த ரேக்ளா போட்டிகள் 100 மீட்டர், மற்றும் 200 மீட்டர் என தனித்தனியாக நடைபெற உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும் இந்த வேளாண் திருவிழா நிகழ்ச்சியின் அனைத்து போட்டிகளில் கலந்து கொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக 8 கிராம் தங்க நாணயம் உட்பட பல்வேறு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சியும் உள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த வேளாண் திருவிழா 20 திருவிழா வின், நிறைவு நாள் விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக தென்னகம் நிறுவனங்களின் தலைவர் கணியூர் இளங்குமரன், சக்தி கல்லூரியின் தலைவர் டாக்டர் தங்கவேலு,
சக்தி கல்லூரியின் செயலாளர் தீபன் தங்கவேலு மற்றும் சக்தி கல்லூரியின் துணை செயலாளர் சீலன் தங்கவேலு ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் வழங்க உள்ளனர்.

மேலும் படிக்க