• Download mobile app
19 Jun 2026, FridayEdition - 3782
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள் அரைநிர்வாண போராட்டம்

August 25, 2018 தண்டோரா குழு

கோவையில் ஊதிய உயர்வு கோரி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தேசிய பஞ்சாலை கழக தொழிலாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி இன்று காலை அரைநிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய அரசின் தேசிய பஞ்சாலை கழகத்தின் கட்டுப்பாட்டில் தமிழகத்தில் கோவை , கமுதகுடி , காளையார் கோவில் ஆகிய இடங்களில் 7 பஞ்சாலைகள் செயல்பட்டு வருகிறது. இந்த பஞ்சாலைகளில் பணிபுரியும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 30 சதவித ஊதிய உயர்வு வழங்க கோரி கடந்த 20 ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வேலை நிறுத்த போராட்டம் 6 வது நாளாக தொடர்ந்து வருகின்றது.வேலை நிறுத்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்ட முதல்கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

இந்நிலையில் வேலை நிறுத்த போராட்டம் தொடரும் நிலையில் கோவை சி.எஸ்.டயிள்யூ ஆலை முன்பாக தொழிலாளர்கள் அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தேசிய பஞ்சாலை கழக ஆலை நிர்வாகம் உடனடியாக ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.இல்லையெனில் தொடர் போராட்டங்களில் ஈடுபட போவதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.

தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் காரணமாக கடந்த 6 நாட்களாக தமிழகத்தில் உள்ள தேசிய பஞ்சாலை கழக ஆலைகளில் பணிகள் முடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க