• Download mobile app
20 Sep 2026, SundayEdition - 3875
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தனிஷ்க் ஜூவல்லரி சார்பில் பிரத்யேக காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சி தொடக்கம்

September 19, 2026 தண்டோரா குழு

டாடா குழுமத்தைச் சேர்ந்த இந்தியாவின் முன்னணி நகை சில்லறை விற்பனை நிறுவனமான தனிஷ்க், கோவையில் பிரத்யேக காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சியைத் தொடங்கியுள்ளது.

கோவை மேட்டுப்பாளையம் ரோடு, ஒப்பணக்கார வீதி, ஆர்.எஸ்.புரம் மற்றும் கிராஸ் கட் ரோடு, பொள்ளாச்சி மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள தனிஷ்க் ஸ்டோர்களில் இந்த பிரத்யேக காதணிகள் கண்காட்சி மற்றும் கோல்டு எக்சேஞ்ச் மேளா நடைபெற்று வருகிறது.

தனிஷ்க் நிறுவனத்தின் கிளஸ்டர் ஹெட் தமிழ்நாடு மெர்சின்டைசிங் சந்தோஷ் EAS அவர்கள் இக்கண்காட்சியை தொடங்கி வைத்தார். காதணிகள் நகைத் தொகுப்பு கண்காட்சி செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 11 வரை நடைபெறும் இக்கண்காட்சி, தினமும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை பார்வையாளர்களுக்காக திறந்திருக்கும்.சிறந்த கைவினைத்திறனுடன் உருவாக்கப்பட்ட காதணிகளின் பிரத்யேக வடிவமைப்புகளை ஒரே இடத்தில் பார்வையிடும் வாய்ப்பை வாடிக்கையாளர்களுக்கு இக்கண்காட்சி வழங்குகிறது.

கண்காட்சியின் ஒரு பகுதியாக வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகளையும் தனிஷ்க் வழங்குகிறது.
ஒவ்வொரு நகை வாங்கும் போதும் *20% வரை தள்ளுபடி பெறலாம். மேலும், கோல்டு எக்சேஞ்ச் திட்டத்தின் கீழ் 18 காரட் வரையிலான தங்கத்திற்கு 0% Deduction வழங்கப்படுகிறது.

தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொண்டு, வாடிக்கையாளர்கள் தங்களுக்கான தங்க விலையை முன்கூட்டியே நிர்ணயித்துக் கொள்ளும் வகையில் ‘Best Gold Rate’ சலுகையும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதன் கீழ் 25% முன்பணம் செலுத்தி, தங்கத்தின் விலையை Freeze செய்து கொள்ளும் வசதியை வாடிக்கையாளர்கள் பெறலாம்.

வடிவமைப்பு நேர்த்தி மற்றும் சிறந்த கைவினைத்திறனுக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் இந்தக் கண்காட்சியில் பல்வேறு வகையான காதணி வடிவமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

குறிப்பாக, அன்றாடப் பயன்பாட்டிற்கு ஏற்ற நேர்த்தியான கம்மல்கள், காலத்தால் அழியாத அழகை வெளிப்படுத்தும் வளையக் காதணிகள், மென்மையான மற்றும் அழகிய தோற்றத்தை வழங்கும் தொங்கும் காதணிகள், சிறப்பு நிகழ்வுகளுக்கு ஏற்ற பல அடுக்கு அலங்காரக் காதணிகள், பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் ஜிமிக்கிகள் மற்றும் தனித்துவமான தோற்றத்தை உருவாக்கும் கனமான மற்றும் தனிச்சிறப்பு கொண்ட காதணிகள் என பல்வேறு வகையான அணிகலன் தொகுப்புகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அர்த்தமுள்ள, நேர்த்தியான மற்றும் காலத்தால் அழியாத நகைகளை விரும்பும் பெண்களுக்கு ஏற்ற வகையில் இத்தொகுப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பாரம்பரியம் மற்றும் சமகால வடிவமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள காதணிகள், தனிப்பட்ட பாணியையும் அழகியலையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன.

தனிஷ்கின் வடிவமைப்பு அழகியல், கைவினைத்திறன் மற்றும் நகைகளின் பின்னணியில் உள்ள அர்த்தமுள்ள கதைகளை கொண்டாடும் வகையில் இக்கண்காட்சி அமைந்துள்ளது. இதன் மூலம் நகை ஆர்வலர்கள், நீண்டகால வாடிக்கையாளர்கள் மற்றும் புதிய வாடிக்கையாளர்கள் ஒரே தளத்தில் இணையும் வாய்ப்பும் உருவாகியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய தனிஷ்க் நிறுவனத்தின் கிளஸ்டர் ஹெட் தமிழ்நாடு மெர்சின்டைசிங் சந்தோஷ் EAS மற்றும் கோவை ஏரியா பிஸ்னஸ் மேலாளர் சிவரஞ்சனி ஆகியோர் கூறுகையில்,

எங்களின் நேர்த்தியான காதணிகள் நகைத் தொகுப்புகளை இந்தப் பிரத்யேக கண்காட்சி மூலம் கோவைக்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். காலத்தால் அழியாத கலைத்திறன், புதுமையான வடிவமைப்பு மற்றும் சிறந்த கைவினைத்திறன் ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் ஒரு கொண்டாட்டமாக இக்கண்காட்சி அமைந்துள்ளது.

கோவை எங்களுக்கு ஒரு முக்கியமான சந்தையாகும். எங்களது மதிப்புமிக்க வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்து வரும் உற்சாகமான வரவேற்பு எங்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது. இக்கண்காட்சிக்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள் காதணிகளின் நேர்த்தியான வடிவமைப்புகளை ரசித்ததுடன், ஒவ்வொரு நகையின் பின்னணியில் உள்ள கைவினைத்திறன் மற்றும் தனித்துவத்தையும் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.

இந்தக் கண்காட்சி மூலம் தனிஷ்க் தனது நம்பிக்கை, சிறந்த தரம் மற்றும் அர்த்தமுள்ள வடிவமைப்புகள் என்ற பாரம்பரியத்தை மேலும் வலுப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு தனித்துவமான நகை வாங்கும் அனுபவத்தை வழங்குகிறது, என்றனர்.

இந்நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் ரோடு, ஒப்பணக்கார வீதி, ஆர்.எஸ்.புரம் மற்றும் கிராஸ் கட் ரோடு ஸ்டோர் மேலாளர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க