• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஜூன் 2ல் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி

May 7, 2022 தண்டோரா குழு

இசைஞானி இளையராஜாவின் பிறந்தநாளையொட்டி வருகிற ஜூன் 2ஆம் தேதி கோவையில் அவர் பங்குபெறும் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளதாக நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக கோவையில் தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த அதன் ஒருங்கிணைப்பு குழுவினர், இசைஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் வருகிற ஜூன் இரண்டாம் தேதி கொண்டாடப்படுவதாகவும் அதனை மிகப்பெரிய அளவில் கொண்டாடும் வகையில் கிரீன் கிளீன் என்ற அமைப்பு சார்பில் இந்த நேரடி இசை நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் குறிப்பிட்டனர்.

தங்களது அமைப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக கடந்த 25 ஆண்டுகளாக பல்வேறு சேவைகள் ஆற்றி வருவதாகவும் தற்போது சுற்றுச்சூழலை மையப்படுத்தியே இந்த இசை நிகழ்ச்சி என்பது நடத்தப்படுகிறது எனவும் சுட்டிக்காட்டினர்.

பழங்குடியின மக்களின் மேம்பாடு மற்றும் அதிக அளவிலான மரங்களை நட்டு அதன் மூலம் ஆக்சிஜன் உற்பத்தி ஆகியவற்றை மையமாகக்கொண்டு இந்த இசை நிகழ்ச்சி என்பது நடைபெறும் என்றும் இசை நிகழ்ச்சியில் இளையராஜா பங்கேற்பார் என்றும் கூறியதுடன், தென்னிந்திய இசை உலகில் முன்னணி பாடகர்கள் இதில் கலந்து கொள்ள உள்ளனர் எனவும் 15,000 முதல் 20 ஆயிரம் பேர் இசை நிகழ்ச்சியை காண வருவார்கள் எனவும் நம்பிக்கை தெரிவித்தனர்.

மேலும் சாமான்ய மக்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கும் வகையில் குறைந்த அளவிலான அனுமதி கட்டணம் வசூலிக்கப்பட இருப்பதாகவும் ஏழை மக்களுக்கு இலவசமாகவும் அனுமதி சீட்டு வழங்கப்படும் எனவும் தெரிவித்தனர்.முன்னதாக இசை நிகழ்ச்சி குறித்த முத்திரை மற்றும் போஸ்டர் ஆகியவற்றையும் அவர்கள் வெளியிட்டனர்.

மேலும் படிக்க