May 7, 2026
தண்டோரா குழு
கோவையில் உள்ள சூயஸ் இந்தியா நிறுவனம், நேட்டிவ் மெடிகேர் சாரிட்டபிள் டிரஸ்ட், வாசன் ஐ கேர் மற்றும் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் ஆகியவற்றுடன் இணைந்து, புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கான இலவச மருத்துவ முகாமை கோவையில் உள்ள தனது திட்ட அலுவலக வளாகத்தில் நடத்தியது.
இதில் இப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விரிவான பொது மருத்துவ பரிசோதனைகள், கண் பரிசோதனைகள், இலவச ரத்தப் பரிசோதனைகள் மற்றும் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான பரிசோதனைகள் செய்து கொண்டனர். அத்துடன், எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும், இலவச மருந்துகளும் வினியோகம் செய்யப்பட்டன. பல்வேறு காரணங்களால் தொடர்ந்து மருத்துவ வசதிகளைப் பெற முடியாத தொழிலாளர்களுக்கு, எளிதில் கிடைக்கக்கூடிய மருத்துவ சேவைகளை வழங்கும் விதமாக இந்த மருத்துவ முகாமை சூயஸ் நிறுவனம் நடத்தியது.
கூடுதலாக, தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம், எச்.ஐ.வி தடுப்பு, பாதுகாப்பான பாலியல் நடைமுறைகள் மற்றும் தேவைப்படுவோருக்குக் கிடைக்கும் ஆதரவுச் சேவைகள் பற்றிய பயனுள்ள தகவல்களை வழங்கியது.இதில் பேசிய கோயம்புத்தூர் சூயஸ் – 24×7 குடிநீர் விநியோகத் திட்டத்தின் திட்ட இயக்குனர் சங்ராம் பட்டநாயக், இந்த முயற்சிக்கான முக்கியக் காரணத்தை விளக்கினார்.
“எங்கள் தொழிலாளர்கள் கடினமான சூழ்நிலைகளில் கடுமையான வேலைகளைச் செய்கிறார்கள். அவர்களின் ஆரோக்கியமே எங்களுக்கு மிகவும் முக்கியமானது. அவர்களுக்குத் தேவையான மருத்துவக் கவனமும் விழிப்புணர்வும் கிடைப்பதை உறுதி செய்வதற்கான எங்களின் நேரடி வழிதான் இந்த முகாம். இதற்கு உதவிய அனைத்து மருத்துவக் கூட்டாளர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று கூறினார்.
இது, சூயஸ் இந்தியா நிறுவனத்தின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்புணர்வு மற்றும் ஊழியர் நலன், குறிப்பாக கடினமான பணிச் சூழலில் இருப்பவர்களின் நலன் மீதான தொடர்ச்சியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.இந்த நிகழ்வு பங்கேற்பாளர்கள் மற்றும் கூட்டாளர் அமைப்புகளிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது. இது ஒரு ஆரோக்கியமான மற்றும் விழிப்புணர்வுள்ள சமூகத்தை உருவாக்குவதில் கூட்டு முயற்சிகளின் நன்மையை வலியுறுத்துகிறது.