• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சுவர் ஏறி குதித்து திருட முயற்சிக்கும் நபர் – சிசிடிவி காட்சி வெளியீடு

January 17, 2020 தண்டோரா குழு

கோவையில் சுவர் ஏறி குதித்து வந்து திருட முயற்சிக்கும் நபரின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

கோவை கவுண்டம்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் அடையாளம் தெரியாத ஒரு நபரின் நடமாட்டம் இருப்பதாக கூறப்படுகிறது. அந்நபர் மருதம் நகர், பாரதி காலணி ஆகிய இடங்களில் 3 வீடுகளில் திருட முயற்சித்தாக தெரிகிறது.

இந்நிலையில், இரு சக்கர வாகனத்தில் வரும் நபர், சுவர் ஏறி குதித்து வந்து ஜன்னல்களை எட்டி பார்ப்பது போன்ற காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இதுதொடர்பாக துடியலூர் காவல் நிலையத்தில் அப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

மேலும் படிக்க