• Download mobile app
24 Jun 2026, WednesdayEdition - 3787
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் சாலைகளை செப்பனிட வலியுறுத்தி திமுகவினர் சாலை மறியல்

February 16, 2018 தண்டோரா குழு

கோவையில் உள்ள பல்வேறு சாலைகளை உடனே செப்பனிட வலியுறுத்தி திமுகவினர் இன்று(பிப் 16) சாலை மறியலில் ஈடுபட முயன்றனர்.

கோவை பீளமேடு,சவுரிபாளையம்,உடையாம்பாளையம்,நவ இந்தியா போன்ற பகுதிகளில் சாலைகள் அதிகளவில் சேதமடைந்து காணப்படுகிறது. இதனை செப்பனிட்டு தர மாநகாரட்சி ஆணையரும் , மாநகர பொறியாளர்களுக்கும் பல முறை கோரிக்கை மனு அளித்தும் பயன் இல்லாத காரணத்தால்,மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், சாலைகளை உடனே செப்பனிட்டு தர வலியுறுத்தியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.

இதனையடுத்து கோவை பீளமேடு பகுதியில் அவிநாசி சாலையில் மறியலில் ஈடுபட முயன்ற இவர்களை,காவல்துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

மேலும் படிக்க