January 14, 2019
தண்டோரா குழு
கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி ரசிகர் மன்றத்தினர் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.
தை திருநாளான பொங்கல் திருவிழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து ஆங்காங்கே பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த ஆர் எஸ் புரம் பகுதியில் , கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமுதாயத்தினர் ஒன்றாக இணைந்து மன்றத்தினர் சமத்துவ பொங்கலை வைத்து கொண்டாடினர்.
இவ்விழாவில் பறை இசையுடன் ரஜினி ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதுமட்டுமின்றி விழாவில் வெளிநாட்டை சேர்ந்தவரும் கலந்து கொண்டு ஆடி மகிழ்ந்தார். ரஜினி தொடர்ந்து ஆன்மீக அரசியல் பேசி நிலையில் கோவையில் அவரது ரசிகர்கள் பல்வேறு மதத்தினரை ஒன்றிணைத்து சமத்துவ பொங்கலை கொண்டாடி அனைத்து மதத்தினரும் ஓன்று தான் என்பதை நிரூபித்து உள்ளனர்.