• Download mobile app
16 Jun 2025, MondayEdition - 3414
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் சமத்துவ பொங்கல் கொண்டாடிய ரஜினி ரசிகர்கள் !

January 14, 2019 தண்டோரா குழு

கோவையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரஜினி ரசிகர் மன்றத்தினர் சமத்துவ பொங்கல் கொண்டாடினர்.

தை திருநாளான பொங்கல் திருவிழா நாளை கொண்டாடப்படவுள்ளது. இதையடுத்து ஆங்காங்கே பொங்கல் விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக கோவையை அடுத்த ஆர் எஸ் புரம் பகுதியில் , கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் பொங்கல் விழா கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு சமுதாயத்தினர் ஒன்றாக இணைந்து மன்றத்தினர் சமத்துவ பொங்கலை வைத்து கொண்டாடினர்.

இவ்விழாவில் பறை இசையுடன் ரஜினி ரசிகர்கள் அனைவரும் உற்சாகமாக ஆடிப்பாடி மகிழ்ந்தனர். இதுமட்டுமின்றி விழாவில் வெளிநாட்டை சேர்ந்தவரும் கலந்து கொண்டு ஆடி மகிழ்ந்தார். ரஜினி தொடர்ந்து ஆன்மீக அரசியல் பேசி நிலையில் கோவையில் அவரது ரசிகர்கள் பல்வேறு மதத்தினரை ஒன்றிணைத்து சமத்துவ பொங்கலை கொண்டாடி அனைத்து மதத்தினரும் ஓன்று தான் என்பதை நிரூபித்து உள்ளனர்.

மேலும் படிக்க