• Download mobile app
23 Jun 2026, TuesdayEdition - 3786
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தனது ஒரு மாத சம்பளத்தை வழங்கிய காவலர் !

April 17, 2020 தண்டோரா குழு

கொரோனா வைரஸ் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன. இதற்கிடையில்,கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு பொதுமக்கள் தங்களால் முயன்ற நிதி உதவி அளிக்க வேண்டும் என முதல்வர் பழனிச்சாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து,கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தொழில்துறையினர், சமூக ஆர்வலர்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களால் முடிந்த அளவு கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு தங்களது பங்களிப்பை அளித்து வருகின்றனர்.

இந்நிலையில்,கோவை ஆயுதப்படையில் பணிபுரியும் முதுநிலை காவலர் பாபு எண்:1018 தனது ஒரு மாத சம்பள பணம் 25,788 ரூபாயை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.இதற்கான காசோலையை மாவட்ட கண்காணிப்பாளர் சுஜித்குமாரிடம் வழங்கினார்.

இது குறித்து காவலர் பாபு கூறுகையில்,

எனது சொந்த பழனி. கடந்த பத்து வருடங்களாக கோவையில் தான் காவல்துறையில் பணியாற்றி வருகிறேன். கொரோனாவால் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டத்தில் இருந்து தினமும் காவல் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நான் கொரோனா பாதிக்கப்பட்ட இடத்திலும் பணியில் இருந்துள்ளேன்.கண்ணுக்கு தெரியாத ஒரு கொடிய வைரஸை எதிர்த்து நாம் தற்போது போராடிக் கொண்டிருக்கிறோம். கொரோனா வைரஸின் பாதிப்புகளை நேரில் பார்த்ததால் என்னால் முடிந்தது ஏதாவது செய்ய வேண்டும் என நினைத்தேன்.இதற்காக என்னால் முடிந்தது எனது ஒரு மாத சம்பள பணம் 25,788 ரூபாயை கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கினேன். என்னுடைய வருமானத்தை நம்பி தான் என் குடும்பம் உள்ளது. இருந்தாலும் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாத இந்த வைரஸின் தாக்கத்தில் இருந்து நாம் விடுபடவேண்டும் என்பதற்கு இந்த தொகையை அளித்தேன் என்றார்.

ஆயுதப்படை தலைமை காவலரின் இந்த செயலை உயர் அதிகாரிகள், சக பணியாளர்கள் உள்ளிட்டோர் பாராட்டி வருகின்றனர்.

மேலும் படிக்க