February 19, 2020
குடியுரிமை சட்டத்திற்க்கு எதிராக தமிழக சட்டமன்றத்தில் தீர்மான நிறைவேற்ற கோரி கோவை உக்கடம் ஆத்துபாலத்தில் அனைத்து இஸ்லாமிய ஜமாத்கள் மற்றும் அமைப்புகள் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் துவங்கியது.
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்திற்க்கு எதிராக போராட்டம் வழுத்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக கோவையிலும் அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் மற்றும் ஜாம்த்கள் சார்பில் நாள்தோறும் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்,கோவை உக்கடம் ஆத்துபாலத்தில் 5000″த்திற்கும் மேற்பட்டோர் இரவிலிருந்து தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து போராட்டகாரர்கள் கூறுகையில்,
குடியுரிமை சட்டதிருத்திற்க்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பிக்கள் வாக்களித்துள்ளார்கள்.இதற்கு பிராய்ச்சித்தமாக மற்ற மாநிலங்களை போல நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரிலே குடியுரிமை சட்டதிருத்தத்திற்க்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும் அதுவரை தாங்களது தொடர் காத்திருப்பு போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.