February 18, 2020
இந்தியா முழுவதும் இரண்டு மாதத்திற்கு மேலாக குடியுரிமை சட்டத்திருத்ததை திரும்பபெறக்கோரி பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் டெல்லி மற்றும் தமிழகத்தில் சி ஏ ஏ என் ஆர் சி க்கு எதிராக போராடுபவர்கள் மீது காவல் துறை தாக்குதலை கடைபிடித்து வருவதை கண்டித்து தொடர்ந்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டும் போராட்டங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் கோவை உக்கடம் அருகே உள்ள கரும்புக்கடை பகுதியிலுள்ள வீடுகளில் அப்பகுதி மக்கள் கருப்பு கொடியை கட்டி தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர். மத்திய அரசு குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெறும் வரை போராட்டம் தொடரும் எனதை அரசுக்கு உணர்த்தவே இன்று வீடுகளில் தேசிய கொடியை ஏற்றியதாக தெரிவித்தனர்.