• Download mobile app
07 Sep 2026, MondayEdition - 3862
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் காவல் நிலையத்தின் மதில் சுவர் கேட்டை சேதப்படுத்தி சென்ற ஒற்றை காட்டு யானை

March 19, 2022 தண்டோரா குழு

கோவை ஆலாந்துறை அடுத்த காருண்யா நகரில் உள்ள தனியார் கல்லூரி வனப்பகுதியை ஒட்டியுள்ள இடத்தில் இருந்து நேற்று இரவு ஒற்றை காட்டு யானை, சிறுவாணி சாலையில் வந்து கொண்டிருந்தது.

இதனைப் பார்த்த பொதுமக்கள் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை விரட்டுவதற்காக நான்கு சக்கர வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தனர். திடீரென சிறுவாணி சாலையில் உள்ள காருண்யா காவல் நிலையத்தின் மதில் சுவர் மற்றும் கேட்டை உடைத்துக் கொண்டு பின்புறம் உள்ள தோட்டத்திற்கு சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

சாலையில் சென்ற காட்டு யானை காவல் நிலைய மதில் சுவர் மற்றும் கேட்டை இடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க