• Download mobile app
19 May 2025, MondayEdition - 3386
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காவல் நிலையத்தை கன்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு

November 6, 2020 தண்டோரா குழு

கோவை ஜிஎன் மில் அருகே, நடைபெற்ற திருட்டு சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்ய மறுத்த காவல் நிலையத்தை, கன்டித்து சாலைமறியலில் ஈடுபட்ட குடும்பத்தினரால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள ஜிஎன் மில் அருகே உள்ள, சுக்ராம்பாளையம் பகுதியை சேர்ந்தவர், லட்சுமி, இவர் அந்த பகுதியில் மளிகை கடை நடத்தி வருவதாகவும், நேற்றுஇரவு வழக்கம் போல், கடையை பூட்டி சென்ற நிலையில், இன்று காலையில் கடையை திறக்க சென்ற போது, கடையின் பூட்டு உடைக்கப்பட்டு, பொருட்களை ஒரு வாகனத்தில் மர்ம நபர்கள் ஏற்றி சென்றதாக கூறப்படுகின்றது.

இது தொடர்பாக அவர்களின் சிசிடிவி பதிவுகளை ஆராய்ந்த போது, இந்த சம்பவம் தெரிய வந்துள்ளது.இதனால், சிசிடிவி காட்சிகளை கொண்டு, துடியலூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். ஆனால் காவல்துறையினர் இது குறித்து முறையாக நடவடிக்கை எடுக்காமல், காலம் தாழ்த்தி, அலட்சிய போக்கோடு செயல்பட்டதால் காவல்துறையினர் மீது ஆத்திரமடைந்த கடை உரிமையாளர்களான லட்சுமி, மற்றும், அவரது குடும்பத்தினர், துடியலூர், காவல்துறையினரை கன்டித்து திடீரேன சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இதுகுறித்து தற்போது காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க