• Download mobile app
20 May 2024, MondayEdition - 3022
FLASH NEWS
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கார்த்தி சிதம்பரத்தின் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து ஆர்ப்பாட்டம்

March 1, 2018 தண்டோரா குழு

கோவையில் கார்த்தி சிதம்பரத்தின் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து அனைத்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக இன்று(மார்ச் 1) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கப்பிரிவு வழக்குப்பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கின் விசாரணைக்காக அவர் டெல்லியில் உள்ள அலுவலகங்களில் கடந்த மாதம் ஆஜராகி விளக்கமளித்திருந்தார்.

இந்நிலையில், நீதிமன்றத்தின் அனுமதியுடன்  லண்டன் சென்று நேற்று சென்னை திரும்பிய அவரை விமான நிலைய வளாகத்திலேயே சி.பி.ஐ அதிகாரிகள்  கைது செய்து டெல்லி அழைத்துச் சென்றனர்.

இந்நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் மீதான கைது நடவடிக்கையை கண்டித்து தெற்கு தாலூகா அலுவலகம் முன்பாக அனைத்து மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயகுமார் தலைமையில் நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்தில்,வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட தலைவர்கள்  வி.எம்.சி. மனோகரன்,பொள்ளாச்சி சக்திவேல் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

மேலும்,நீரவ் மோடி, மேகுல் சோக்சி, த்வாரகா தாஸ் சேத் ஜுவல்லரி என பாஜக ஆட்சியில், மோசடி பட்டியல் நீண்டு கொண்டே போவதால் அதில் இருந்து கவனத்தை திசை திருப்பவே இந்த கைது நடவடிக்கை நடந்துள்ளதாகவும், முறைகேடு விவகாரங்களில் காங்கிரசின் குற்றச்சாட்டுகளே பொதுமக்களிடம் அதிகம் சென்று சேருவதால் மத்திய அரசு இது போன்ற கைது நடவடிக்கைகள் மூலம் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது என்றும் தெரிவித்தனர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் கலந்து கொண்டு மத்திய அரசை கண்டித்து கோசங்கள் எழுப்பினர்.

மேலும் படிக்க