February 1, 2019
தண்டோரா குழு
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அடூர் பகுதியை சேர்ந்தவர் அமல் பி.குமார் (19) அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் அதே வகுப்பில் படிக்கும் கொல்லம் அடூர் பகுதியை சேர்ந்த மாணவி சூர்யா. எஸ்.நாயர் (18) என்பவரை காதலித்து வந்ததாக தெரிகிறது.
இந்நிலையில் நேற்று காலை 5 மணியளவில் கொல்லத்தில் டிக்கெட் எடுத்து போத்தனூர் ரயில் நிலையம் வந்துள்ளனர். அங்கிருந்து கோவை நோக்கி சென்ற தண்டவாளத்தில் நடந்து சென்று நஞ்சுண்டாபுரம் பகுதி அருகே வரும் போது 6 மணியளவில் கோவை நோக்கி வந்த கோட்டயம் – சென்னை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர்.
இதையடுத்து அங்கு வந்த ரயில்வே போலீசார் அவர்களது உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனை க்காக அனுப்பி வைத்தனர். சம்பவம் தொடர்பாக கோவை கோட்டரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.