February 14, 2019
தண்டோரா குழு
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக காதலர் தினவிழா கலப்புமணம் புரிந்தவர்கள் நலச்சங்கத்தினர் தங்களது இணைகளோடு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.
உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கலப்பு திருமணம் புரிந்தவர்கள் நலச்சங்கத்தினர் , காதலர் நாளை சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் காதல் திருமணம் புரிந்தவர்கள் தங்களது குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.
தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் பேசுகையில் ,
உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதல் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இயற்கையாக இருக்கக்கூடிய உணர்வு என என்றார்.
மேலும், இந்தியாவில் தான் , காதலர்களுக்கு எதிராக சாதிய, மத வெறியர்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். காதல் திருமணம் புரிந்தவர்களுக்கு அரசு இடஒதுக்கீடு வழங்கி அவர்களை பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆணவ படுகொலைகளுக்கு எதிராக அவசர சட்டம் இயற்றி காதலர்கள் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.