• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காதலர் தினத்தை கேக் வெட்டி கொண்டாடிய த. பெ.தி.க அமைப்பினர்

February 14, 2019 தண்டோரா குழு

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பாக காதலர் தினவிழா கலப்புமணம் புரிந்தவர்கள் நலச்சங்கத்தினர் தங்களது இணைகளோடு கேக் வெட்டி கொண்டாடினார்கள்.

உலகம் முழுவதும் இன்று காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் சார்பில் கலப்பு திருமணம் புரிந்தவர்கள் நலச்சங்கத்தினர் , காதலர் நாளை சிறப்பாக கேக் வெட்டி கொண்டாடினார்கள். இந்நிகழ்வில் காதல் திருமணம் புரிந்தவர்கள் தங்களது குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.

தந்தை பெரியார் திராவிடர் கழகத்தின் பொதுச்செயலாளர் கு.இராமகிருட்டிணன் பேசுகையில் ,

உலகம் முழுவதும் காதலர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. காதல் மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இயற்கையாக இருக்கக்கூடிய உணர்வு என என்றார்.

மேலும், இந்தியாவில் தான் , காதலர்களுக்கு எதிராக சாதிய, மத வெறியர்கள் செயல்படுவதாக குற்றம் சாட்டினார். காதல் திருமணம் புரிந்தவர்களுக்கு அரசு இடஒதுக்கீடு வழங்கி அவர்களை பாதுகாப்பு வழங்க வேண்டும். ஆணவ படுகொலைகளுக்கு எதிராக அவசர சட்டம் இயற்றி காதலர்கள் காக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும் படிக்க