• Download mobile app
15 Jun 2025, SundayEdition - 3413
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் காதலர் தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணியினர் ஆர்பாட்டம்

February 13, 2019 தண்டோரா குழு

காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை காந்திபுரம் பகுதியில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்தும் எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.

சர்வதேச காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணியினர் 50க்கும் மேற்பட்டோர் cகிராஸ்கட் சாலையில் ஊர்வலமாக சென்று காதலர் தின எதிர்ப்பு முழக்கமிட்டனர். அப்போது காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து எறிந்த அவர்கள் அவற்றை தீயிட்டு எரிக்கும் செருப்பால் அடித்தும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.

மேலும் காதலர் தினத்தின் போது காதல் என்ற பெயரில் அத்துமீறும் அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். காவல்துறையினரின் அனுமதியை மீறி ஊர்வலமாக சென்றது போராட்டம் நடத்திய சுமார் 55 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும் படிக்க