February 13, 2019
தண்டோரா குழு
காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் காதலர் தின கொண்டாட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை காந்திபுரம் பகுதியில் காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்தும் எரித்தும் போராட்டத்தில் ஈடுபட்ட இந்து முன்னணி அமைப்பினர் கைது செய்யப்பட்டனர்.
சர்வதேச காதலர் தினம் நாளை கொண்டாடப்பட உள்ளது. இந்த கொண்டாட்டத்திற்கு நாடு முழுவதும் இந்து அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வரும் நிலையில் கோவை காந்திபுரம் பகுதியில் இந்து முன்னணியினர் 50க்கும் மேற்பட்டோர் cகிராஸ்கட் சாலையில் ஊர்வலமாக சென்று காதலர் தின எதிர்ப்பு முழக்கமிட்டனர். அப்போது காதலர் தின வாழ்த்து அட்டைகளை கிழித்து எறிந்த அவர்கள் அவற்றை தீயிட்டு எரிக்கும் செருப்பால் அடித்தும் தங்கள் கண்டனத்தை வெளிப்படுத்தினர்.
மேலும் காதலர் தினத்தின் போது காதல் என்ற பெயரில் அத்துமீறும் அவர்கள் மீது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தனர். காவல்துறையினரின் அனுமதியை மீறி ஊர்வலமாக சென்றது போராட்டம் நடத்திய சுமார் 55 பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.