• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவையில் கட்டாய ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை இல்லை – மாவட்ட ஆட்சியர்

March 23, 2020 தண்டோரா குழு

கோவையில் கட்டாய ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை ஏற்படவில்லை என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார்.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பாதிப்பு, கோவையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் இருந்து வந்த கோவை மாணவி ஒருவருக்கு மருத்துவ பரிசோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. கோவை அரசு மருத்துவமனை முன்பு மாநகராட்சி சார்பில் பேருந்துகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. இதனை மாவட்ட ஆட்சியர் ராசாமணி நேரில் பார்வையிட்டார். மேலும் கோவை அரசு மருத்துவமனை மற்றும் கொரோனா வார்ட்டை அவர் ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு மாவட்ட ஆட்சியர் ராசாமணி பேட்டியளித்தார்.

அப்போது பேசிய அவர்,

கோவையில் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள் மூட உத்தரவிட்டுள்ளது.கோவையில் முழுமையாக சுய ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டுள்ளது. தமிழக – கேரள எல்லைகள் மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது. எல்லையில் 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பு நடைபெற்று வருகிறது.

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 வரை மக்கள் ஒன்று கூடாமல் இருக்க வேண்டும்.மக்கள் அனைவரும் வீடுகளில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவையில் கொரோனா பாசிட்டிவ் வந்துவர் மருத்துவமனையில் நலமாக இருக்கிறார்.கோவையில் கட்டாய ஊரடங்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை எனவும், கோவையில் கட்டாய ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய நிலை இல்லை எனவும் ராசாமணி தெரிவித்தார்.

மேலும் படிக்க