• Download mobile app
08 May 2026, FridayEdition - 3740
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் கடையை அகற்றகோரி அதிகாரிகள் மிரட்டியதால் வாலிபர் தீ குளிக்க முயற்சி

February 1, 2018 தண்டோரா குழு

கோவையில் கடையை அகற்றகோரி அதிகாரிகள் மிரட்டியதால், வாலிபர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை செல்வபுரத்தை சேர்ந்தவர் காஜாஉசேன். இவர் தனது வீட்டின் முன்பு பெட்டி கடை போட்டுள்ளார். அந்த கடையை அகற்ற கோரி மாநகராட்சி அதிகாரிகள் மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் மனமுடைந்த காஜாஉசேன் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணை கேனுடன் வந்து தீ குளிக்க முயற்சி செய்தார்.

இச்சம்பவத்தை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிபிடித்து அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வார்டு மறுவரையறை தொடர்பாக 3 மாவட்ட ஆட்சியர்கள் பங்குபெறும் பொதுமக்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வரும் நிலையில் இந்த தீ குளி்ப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் படிக்க