• Download mobile app
18 Sep 2025, ThursdayEdition - 3508
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தொடர்பாக விரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் தீவிரம்

December 10, 2020 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் தொடர்பாக மக்களிடம் விரல் ரேகை பதிவு செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.

தமிழகத்தில் ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் 32 மாவட்டங்களில் கடந்த அக்டோபர் மாதம் 2ம் தேதி முதல் அமலுக்கு வந்தது. இதனை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். தமிழகம் முழுவதும் இதற்காக, அனைத்து ரேஷன் கடைகளிலும் பாயிண்ட் ஆப் சேல் இயந்திரத்துக்கு மாற்றாக பயோ மெட்ரிக் எனப்படும் விரல் ரேகை பதிவு இயந்திரம் வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நடைமுறையின் மூலம் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பொருட்களை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே விரல் ரேகை பதிவு செய்யும் பணியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக இத்திட்டம் கடந்த சில மாதங்களுக்கு முன் நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து தொழில்நுட்ப கோளாறுகள் சரிசெய்யப்பட்டு மீண்டும் இத்திட்டத்தை செயல்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மாவட்ட நிர்வாக அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘கோவை மாவட்டத்தில் உள்ள 15க்கும் மேற்பட்ட ரேஷன் கடைகளில் பரிசோதனை முறையில் பயோ மெட்ரிக் இயந்திரம் மூலம் விரல் ரேகை பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகள் தீவிரமடைந்துள்ளன. விரைவில் அனைத்து கடைகளிலும் பயோ மெட்ரிக் இயந்திரம் மூலம் கைரேகை பெறப்படும்,” என்றார்.

மேலும் படிக்க