March 10, 2020
காட்டூர் ரங்கே கோணார் வீதியில் இந்து முன்னணி கோவை மாநகர் மாவட்ட தலைமை அலுவலகம் உள்ளது.இங்கு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.
இன்று காலை பத்து மணிக்கு அலுவலக ஊழியர் திறக்க வந்தபோது உடைந்த பாட்டில் கிடப்பதை கண்டு இந்து முன்னணி அமைப்பினருக்கு தகவல் அளித்துள்ளார்.இதனை தொடர்ந்து காவல்துறையினர் தகவல் கிடைக்க பெற்று சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.சம்பவ இடத்திற்க்கு வந்த சட்டம் ஒழுங்கு துனை ஆனையர் பாலாஜி சரவணம் காவல்துறையினர் மற்றும் இந்து முன்னணி அமைப்பினர் மற்றும் அருகில் உள்ளவர்களிடம் விசாரணை மேற்கொண்டார்.
மேலும் அங்கு அருகில் சிசிடிவி கேமராவில் சம்பவம் தொடர்பாக பதிவாகி உள்ளதா எனவும் விசாரித்து வருகின்றனர்.சம்பவ இடத்தில் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் சம்பவ இடத்தில் உள்ளனர். இதன் காரணமாக போலீஸ் காவல் போடப்பட்டு உள்ளது.